Monday, October 8, 2007

சிம்பு...அழுவாத,ப்ளீஸ்!!!!!!

(இந்த கான்வெர்சேசன் நம்ம வ(சி)ம்பு(!!!) ஜோடி நம்பர் -1 செட்லருந்து வந்ததும் நடந்தது)

வம்பு : அப்பா…பாருப்பா…எல்லாரும் என்ன திட்டிட்டே இருக்காங்க…ம்ம்ம்...நா அழுவேன் போ…நா உண்மையதான சொனேன். அதுக்கு ஏன் திட்டராங்க???

டி.ஆர் : டேய் மவனே…என்கிட்டயேவா???? என் மவனே சிம்பு…உனகேண்டா வம்பு…வேணும்னே உனக்கு விடுறாங்கடா அம்பு…

வம்பு : போப்பா…நீ தான் எல்லா அரட்டை அரங்கத்துலயும் அழுது நல்ல பேரு வாங்கிக்கிர….அதான் நானும் அத ட்ரை பண்ணேன். ஆனா அத எல்லாரும் சேந்து காமெடி பண்ணிட்டானுங்க.

டி.ஆர் : டேய்…அழற எடத்துல தாண்ட அழணும்….ஆடற எடத்துல போயி அழுதுட்டு இருந்தா இப்படிதான் ஆகும். ஆமா, நா உன்கிட்ட என்னிக்காவது சொல்லிருக்கேனா ‘பொது எடத்துல நடிக்ககூடாது’னு??? ஏண்டா உன்னோட கேவலமான டயலாக்லாம் நா சொன்னதா சொல்லிட்டு திரியர…..அதுவும் கைய கால ஆட்டி அதுக்கு ஒரு எஃபெக்ட் வேற….மானம்போகுது.

வம்பு : போப்பா…எல்லாரும் என்ன திட்டறீங்க…நயன்தாரா திட்டுச்சு. பிருத்வி திட்டறான்…..இப்போ நீ திட்டற..நானும் என்னதான் பண்து????

டி.ஆர் : ஆமா...நீ பண்ற வேலக்கு உன்ன திட்டாம என்ன பண்ணுவாங்க….ஏண்டா, ஒரு விஷயத்தயாவது ஒழுங்க ‘பன்றி’யா நீ???? எதோ ஒன்றயணா பல்லுசெட்டு வாங்கிட்டு வந்து கெட்-அப் சேன்ஞ்ச்-னு என்கிட்டயே நீ ஃபிலிம் காட்டற..ம்…..அவதான் உன் லவர்-னு ஊர் முழுக்க தண்டோர அடிச்சேல்ல…அப்புறம் ஏண்டா அந்த பொண்ண அந்த அளவுக்கு கேவலமா படத்துல காட்டற…சரி அதாவது போகட்டும்…இந்த ஃபோட்டோ, ஃபோன் கான்வெர்சேசன்லாம் இண்டர்நெட்ல போடரது….அப்புறம் அது நானே இல்ல, இது எங்கப்பா மேல சத்தியம்-னு என்ன கொல்லப்பாக்கரது. ஏன் உனக்கு இந்த கொலவெறி???

வம்பு : லூசு அப்பா….இப்போ நீ ஏன் பழய மேட்டர்க்குலாம் போர….நானே என் நயன் போன துக்கத்துல இருந்து இன்னும் மீளாம இருக்கேன். அதுல இருந்து வெளிய வரதுக்குதான் நான் இந்த மாதிரி எல்லாம் பண்ணி என்ன நானே தேத்திக்கிறேன்.

டி.ஆர் : யாரு??? நீ??? இதெல்லாம் கேக்கணும்னு என் நேரம்டா. எல்லாரும் ஒரு மார்க்கமா தாண்டா அலயறேங்க…ரஜினி பொண்ணுக்கே ரூட்டு விட்டவந்தான நீ…பாவம், கடசி நேரத்துல அந்த பொண்ணு தப்பிச்சுகிச்சு.

வம்பு : அப்பா…ரஜினி மாமாக்கு இன்னொரு பொண்ணு வேற இருக்கு..மறந்து விட்டீர்களா…ஹாஹா….

டி.ஆர் : இங்க பாரு மவனே…உனக்கு இருக்கற கிரிமினல் மூளக்கு பேசாம என்னோட கட்சியில சேந்திடு. நாளய சமுதாயம் இளைஞர் கையிலேனு நாம பிரச்சாரம் பண்ணா ஒவ்வொருத்தானும் பிச்சுகிட்டு வந்து ஓட்ட போடணும். ‘முதல்வர் சிம்பு’ கேக்கவே எவளோ குளிர்ச்சியா இருக்கு

வம்பு : எனக்கு கொல நடுங்குது…உன்னதான் எவனுமே மதிக்கிறதில்லல…உன்னோட கட்சில நீயும், மும்தாஜ் மட்டும்தான் இருக்கீங்க. எனக்கு மும்தாஜ் சித்தி சைச பாத்தாலே உயிர் போய் உயிர் வருது.பேசாம இந்த கட்சி,பட்சி எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு வா. இனிமே வரப்போற என் படம்ஸ் (மானம்)கெட்டவன்,(தோசை)சுட்டவன்,(லிப்ப)கடிச்சவன் எல்லாத்துலயும் ஒரு பாட்டு பாட சான்ஸ் தரேன்.பாட்டு கடைசில நான் ‘பின்னிட்டீங்க’,’பிரிச்சீட்டீங்க’,’பொளந்துட்டீங்க’,’எரிச்சுட்டீங்க’-னு கமெண்ட் கூட சொல்றேன்.

டி.ஆர் : டேய்…என்கிட்டயே உன் வேலய காட்டறய நீ…நானெல்லாம் ஹீரோயின தொடாமயே நடிச்சவண்டா..

வம்பு : கிளிச்ச..உன் ஹீரோயின்ஸ் பொடற ட்ரெஸ்க்கு நீ அவங்கல தொட்டு வேற நடிக்கணுமா. என்னமோ வீராச்சாமிய ஆஸ்கர்க்கு நாமினேட் பண்ணிருக்காங்க மாதிரி பீலா வுட்ர நீ. அதுலாம் ஏன் பேசற நீ..கட்சி வேண்டாம்னா வேண்டாம். ஏண்டா செல்லம் உனக்கு புரிய மாட்டேங்குது. ப்ளீஸ்டா…குட்டிமா…

(‘அய்யய்யோ…இவனுக்கு அடிக்கடி இப்படி ‘Short term Memory Gain’ ஆகுதே ‘ அப்படினு அலறிகிட்டே நம்ம டி.ஆர் ஓடரார்)

டிஸ்கி : மக்களே…இங்க இருக்கறது எல்லாம் கற்பனையே…கற்பனையை தவிர வேற ஒண்ணுமே இல்ல….

3 comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

செமத்தியா வாரு பிடிப்பிங்க போலருக்கே..

பாரதி தம்பி said...

ஆனந்த விகடன் லூசுப்பையன் ஏழரைக் காலனி போல காமெடியில பின்றீங்களே.

வைதேகி said...

//அறிவன் /#11802717200764379909/ said...
செமத்தியா வாரு பிடிப்பிங்க போலருக்கே..
//
//ஆழியூரான். said...
ஆனந்த விகடன் லூசுப்பையன் ஏழரைக் காலனி போல காமெடியில பின்றீங்களே.
//

ஏதோ நம்மளால முடிஞ்சதுங்க.