Wednesday, October 3, 2007

மர்லின்

மர்லின் மன்றோவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. The most Beautiful lady என்று வர்ணிக்கப்பட்டவர். வெற்றிகரமான நடிகை என்று அழைக்கப்பட்ட போதிலும் இவரது வாழ்க்கை பல ஆச்சரியங்கள் நிறைந்தது. மிகவும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து மேற்க்கத்திய படவுலகின் முடிசூடா ராணியாக திகழ்ந்தவர் மர்லின் என்ற நோர்மா.ஒரு Foster home-ல் தான் தன் இளமை பருவத்தை களித்தார். பின் ஒரு போர் விமானங்கள் செய்யும் தொழிற்ச்சாலையில் முதல் பணியில் சேர்ந்தார். அங்கு ஒரு புகைப்பட கலைஞர் 'போரில் பெண்களின் பங்களிப்பு' என்ற கருத்துக்காக புகைப்படங்களை எடுத்து கொண்டிருந்தார். அவர் நோர்மா வையும் சில படங்களை எடுத்தார். அதில் சில படங்களை பார்த்த ஒரு மாடலிங் நிருவனம்தான் நோர்மாவை மாடலிங் உலகிற்க்கு அறிமுகபடுதியது. மாடலிங் உலகிற்க்கு வந்ததும் இவரது பெயர் வர்த்தக உலகதிற்க்கு ஏற்றதாக இல்லை என்று தன் பெயரை மர்லின்( on bahalf of Marylin Miller) மன்றோ(தன் அம்மாவின் முதல் பெயர்) என மாற்றி கொண்டார்.


(என்னா கண்ணுங்க….chance e illa)
அதன் பின் மர்லின்க்கு ஆங்கிலத்தில் சொல்வது பொல 'No Looking Back’'. மாடலிங்கை தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வந்தன. ரசிகர்களின் கனவுக்கன்னி ஆனர். இவரது கடைகண் பார்வைக்காக தவமிருந்தனர் பலர்.
இவரது 'The Seven Year Itch' என்ற திரைப்படத்தில்தான் இவரது புகழ் உச்சிக்கு சென்றது. 'The Most Iconic Image of the 20th century' என்று அழைக்கபட்ட இவரது இந்த புகைப்படம் இவரை உலகபுகழ் அடைய செய்தது.

(இந்த pose-அ கூட நம்ம ரம்பா காப்பி அடிச்சதே ‘அழகிய லைலா’ பாட்டுல…)
இவரது 4 திருமணங்களும் வெற்றிகரமானதாக இல்லை. தனது வாழ்நாளின் கடைசி கட்டங்களில் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார் ஜான்.F.கென்னடியுடன் இவர் கொண்டிருந்த ரகசிய காதல் உலகமறிந்த (!!!) ஒன்று. கென்னடியின் மனைவியான ஜாக்குலின்க்கும் இவர்க்குமான குழாயடிசண்டைதான் அன்றைய பத்திரிக்கைகளுக்கு அவல். இவரது இறப்பிற்கு முன்பு இவரது கடைசி பொது நிகழ்ச்சி கென்னடியின் பிறந்தநாள் விழா. அப்பொது அவர் பாடிய ‘Haappy Birthday Mr.President’ பாடலை கேட்டு ‘Jackie had fits’ என்று மேற்கத்திய பத்திரிக்கைகள் எழுதின.
தனது 36 வது வயதில் மிகவும் மர்மமான முறையில் இவர் இறந்தார். இவரது வீட்டின் பணிப்பெண்ணால் இவரது உடல் படுக்கை அறையில் கண்டுபிடிக்கப்பட்டது. அளவுக்கு அதிகாமான தூக்கமாத்திரையால் இவர் இறந்தாக காரணங்கள் சொல்லப்பட்டாலும்,இவரது மரணம் இன்னும் மர்மம் நிறைந்தாகவே கருதப்படுகிறது.






2 comments:

Ayyanar Viswanath said...

பதிவுலகிற்கு நல்வரவு

வைதேகி said...

நன்றி